எங்களைப்பற்றி (About Us)
1976-ம் ஆண்டு ஏப்ரல் 11-ம் நாள் அன்று அப்போது கோவை, காந்திபுரம் புனித பாத்திமா ஆலயப்பங்கு தந்தை அருட்தந்தை ஏசுதாஸ் அடிகளார் அவர்கள் முன்னிலையில், அன்றைய கப்புச்சின் மாநில அதிபராக இருந்த அருட்தந்தை ஜோனத்தான் அடிகளார் தலைமையேற்க 12 இளம் வாலிபர்களை உறுப்பினர்களாகக் கொண்டு தொடங்கப்பட்டது
தேனீக்களின் தெவிட்டாத செயல்கள்
- மன்றத்தார் வேறு வேறு வேலை, படிப்பு, பின்புலம் மொழி போன்றவற்றால் வேறுபட்டிருந்தாலும் FRC என்னும் குடையின் கீழ் ஒன்றுபடுவது இதன் சிறப்பு.
- பெண்கள் தெரிந்த நபர்களோடு பழகும்போது சகோதர உணர்வையும், பாதுகாப்பு உணர்வையும் ஒருசேரப் பெறுகின்றனர்.
- குழந்தைகள் தனக்கு தெரிந்த, அறிந்த மற்றும் பல குடும்பங்களோடு இணைந்து செயலாற்றும்போதும் விளையாடும்போதும், தனிமை உணர்வைத் தவிர்த்து தன நட்பு வட்டத்தைப் பெருகிக்கொள்கின்றனர். இவை எல்லாவற்றிற்கும் மேலாக எந்த குடும்பத்தில் இன்பமோ, துன்பமோ, குடும்ப நபர்கள் அருகில் இல்லாத சூழலில், அந்த எண்ணத்தை களைந்து நாங்கள் இருக்கிறோம் என அணைத்து குடும்பங்களும் இணைவது என அனைத்து குடும்பங்களும் இணைவது எங்கும் கிடைக்காத வரப்பிரசாதம்.
இறந்தபின் கண் தானம்!
உடல் உறுப்பு தானம் என்பது தன் உடம்பிலுள்ள உறுப்பையோ அல்லது உறுப்புகளின் ஒரு பகுதியையோ, மரண வாசலில் நின்றுகொண்டு பரிதவிக்கும் ஒருவருக்கு, தாமாக முன்வந்து தானம் தந்து காப்பாற்றுவதாகும்.
GET MORE INFOஇருக்கும் வரை இரத்த தானம்!
இரத்த தானம் என்பது மன நிறைவைத்தரும் மனித நேயமிக்க அருஞ்செயலாகும். நல்ல ஆரோக்கியமான உடல் நிலையிலுள்ள ஆண், பெண் இருபாலரும் 3 -6 மாதங்களுக்கு ஒரு முறை இரத்த தானம் செய்யலாம்.
GET MORE INFOஉயிர் வாழ தோல் தானம்!
தோல் எரிந்துவிட்டால் புண்களின் மூலம் கிருமிகள் எளிதில் பரவி நோயாளிகள் இறக்க நேரிடும். அவர்களுக்கு தானமாய்பெற்ற தோலினை புண்களின் மேல் வைத்து கிருமிகள் மேலும் உடம்பில் பரவாமல் காப்பாற்ற முடிகிறது.
GET MORE INFO